Sunday, January 31, 2010

பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - சுழற் காற்று (Ponniyin selvan pictures II)

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சித்திரங்களிலான முந்தைய பதிவை அடுத்து இரண்டாம் பாகமான சுழற் காற்றின் சித்திரங்கள் இந்த பதிவு மூலம் வழங்கப்படுகிறது. முன்பு ஓவியர் வினுவின் கைவண்ணத்தை பார்த்தோம். இப்போது ஓவியர் மணியம் அவர்களின் கைவண்ணத்திலான் ஓவியங்களை பார்ப்போம். பொன்னியின் செல்வன் 1987 ல் கல்கியில் தொடர்கதையாக வந்த போது வெளிவந்த சித்திரங்கள் இவை. பைன்டிங் செய்யப்பட்ட புத்தகம் என்பதால் சில ஸ்கேன்களின் நடுவே வரும் கருப்பு கோடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இரண்டாம் பாகத்தின் பல சித்திரங்களில் ஒரு சில சித்திரங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

பதிவின் கடைசியில் இருக்கும் வரைபடம் பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது கதையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

பூங்குழலியின் அழகிய தோற்றம்




வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் கோடியக்கரையில் நுழையும் காட்சி


வந்தியத்தேவனும் பூங்குழலியும்


நீச்சல் தெரியாத வந்தியத்தேவனை வேடிக்கை செய்யும் பூங்குழலி

பூங்குழலியின் வீட்டில்

இராமேசுவரத்திலிருந்து அநிருத்த பிரம்மாதிராயர் தனது குழுவுடன் இலங்கை செல்லும் காட்சி

காவரித்தாய் மீட்டெடுத்த பொன்னியின் செல்வன்.

சுந்தர சோழரின் ஊமைராணி பற்றிய நினைவுகள்

இலங்கையில் மத யானை ஓடிவரும் காட்சி

யானையை துரத்த முயலும் ஆழ்வார்க்கடியான்

சீனத்து யாத்திரீகர்களின் யானை பவனி. (யானை பாகனாக பொன்னியின் செல்வன்)

இலங்கை வீதிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான்

புத்த பிஷூ சங்கத்தில் இளவரசர்

பூங்குழலியும் இளவரசரும்

யானை பாகனாக இளவரசரும் பூங்குழலியும்

அரேபியர்களுடான சண்டையில் வந்தியத்தேவன்

அரேபியர்களின் கப்பலை தாக்கும் இடி

அந்த கப்பலில் மரணத்தை சந்திக்க தயாராகும் வந்தியத்தேவன்

வந்தியத்தேவனை காப்பற்றும் முயற்ச்சியில் பொன்னியின் செல்வர்

பூங்குழலியின் படகு மூலம் கரைக்கு செல்லும் காட்சி

கதை நடக்கும் இடங்களில் வரைபடம்

பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - முதல் பாகம்
கல்கியின் மோகினி தீவு சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
கல்கியின் புதல்வி ஆனந்தி அவர்களின் சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
பொன்னியின் செல்வன் கார்டூன் பற்றிய நண்பர் லக்கி லிமிடின் பதிவை படிக்க...

குறிப்பு: பொன்னியன் செல்வன் மீதுள்ள பற்றால் ஓவியங்கள் பதிவு இடபட்டுள்ளது. உரிமையாளர் விரும்பினால் நீக்கப்படும்.

Saturday, January 23, 2010

கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை(Kalki's Mohini theevu in comics)

வணக்கம் தோழர்களே,


பொன்னியின் செல்வன் படித்த காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர்க்கு பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லையென்றாலும் கல்கியின் வேறு ஒரு படைப்பை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை சிறிது நாட்களுக்கு முன் நிறைவேறியது. அதற்கான நன்றியை வாண்டுமாமா அவர்களுக்கும் பூந்தளிர் நிறுவனதிற்கும் செலுத்தவேண்டும்.

" கதை - ஆனந்தி, படம் - வினு " இந்த கூட்டணி பல சித்திரக்கதைகளை கோகுலம் இதழில் படைத்திருக்கிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு இந்த கதைகள் பூந்தளிர் இதழிலும் வெளிவந்தன. அப்போது பூந்தளிர் இதழானது ஒரு சிறிய இடைவெளிக்கு பின் வாண்டுமாமா அவர்களின் மேற்பார்வையில் வெளிவர தொடங்கி இருந்தது. கல்கியின் நூற்றாண்டு விழா ஆண்டான 1999 ல் கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.



கல்கியின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் போன்ற நெடுங்கதைகளே மிகவும் பிரபலம். ஆனால் மோகினித்தீவு 100 பக்கங்களுள் அடங்கிவிடக்கூடிய குறுங்கதையாகும். மோகினிதீவு கதை உருவானது பற்றி ஒரு சுவையான தகவலை அவரது மகன் திரு கி ராஜேந்திரன் அவர்கள் மோகினித்தீவின் நாவல் வடிவ புத்தகத்தில் கூறிள்ளார்.

முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 60வது ஆண்டு பிறந்தநாள்க்கு ஒரு சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டது. அதில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட சிறுகதையே மோகினிதீவு ஆகும். இந்த சிறுகதைதான் பின்னாளில் ஒரு குறு நாவலாக மாற்றி கல்கி இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதை ஆயுத குறைப்பு பற்றி குறிப்பிடுவதால் நேருவிற்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.



பர்மாவிலிருந்து கப்பலில் வரும் பாஸ்கர கவிராயர் என்பவர் பயனத்தின் இடையே ஒரு மக்கள் வசிக்காத ஒரு தீவினுள் செல்கிறார். பழைய சோழர்கால சிற்ப்பங்களையும் கலை படைப்புகளையும் பார்த்து வியந்துகொண்டிருக்கும் போது அழகே வடிவான ஒரு பெண் மற்றும் ஒரு ஆடவன் அங்கு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கதையே மோகினிதீவு. சோழர்கள் காலத்தில் நடந்த பாண்டிய இளவரசிக்கும் சோழ இளவரசனுக்கும் இடையேயான காதல் கதையை அவர்கள் கூறுகிறார்கள். சோழர்களும் பாண்டியர்களும் பகைமை பாராட்டிகொண்டிருந்த நிலையில் அவர்களுடைய காதல் எப்படி நிறைவேரியது என்பதை சுவாரிஸ்யாமாக விளக்குகிறார்கள்.



100 பக்கங்களில் படிப்பதற்க்கு இனிமையாக வழங்கப்பட்டிருக்கும் இந்த கதையை 16 பக்கங்களில் இனிமை குன்றாமல் வழங்குவது என்பது எளிமை அல்ல. இநத முயற்ச்சியில் ஓரளவே வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஆனந்தி மற்றும் வினு. 16 பக்கம் தான் என்ற கட்டுபாட்டை மீறி இருந்தால் மிகவும் அருமையான ஒரு சித்திரக்கதையை படித்திருக்கலாம் என்பது என் கருத்து. சித்திரக்கதையில் கதை சுருக்கம் படிப்பது போலவே இருக்கிறது. பெரும்பாலான காதல் காட்சிகளை நீக்கிவிட்டே இந்த சித்திரக்கதையை தொகுத்து இருக்கிறார்கள். எனினும் வினுவின் உயிர்ப்பான சித்திரங்களை பார்த்துகொண்டே இருக்கலாம். நீங்கள் மோகினிதீவு நாவல் வடிவத்தை படிக்காமல் இந்த சித்திரக்கதையை படித்தால் சிறப்பான ஒரு கதையாகவே தெரியும்.

கல்கியின் படைப்பை சித்திரக்கதை வடிவில் படிப்பது எனும் எனது ஆசை ஓரளவு நிறவேறியது என்று கூறலாம். எனினும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை சித்திரக்கதை வடிவில் வழங்குவது தமிழ் சித்திரக்கதை உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பது என் எண்ணம்.

பதிவை படித்து விட்டு உங்கள் கருத்துகளை வழங்கிடுங்கள்.
 
கல்கியின் மோகினித்தீவு நாவலை online ல் படிக்க இங்கே கிளிக்கவும்

Friday, January 8, 2010

அமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் (Devotional comics by Amutha)

          புராண சித்திரகதைகள் தமிழ் சித்திரக்கதை உலகிற்கு புதியது அல்ல. பைக்கோ நிறுவனத்தின் அம்ர் சித்திர கதா, கதை மலர், சிறுவர்மலரின் தொடர்கதைகள் மற்றும் ஆனந்தியின் சில சித்திரகதைகள் புராண கதைகளை சித்திரகதை வடிவில் வழங்கும் வழக்கத்தை சிறப்பாக செய்திருந்தன. இதில் புகழ் பெற்ற சித்திரகதை ஓவியர்களை பலரின் கைவண்ணத்தை ஒருங்கே பார்க்கும் அனுபவத்தை கதைமலர் கொடுக்கிறது. இந்த வரிசையில் சென்னையின் அமுத நிலையம் சமயகுரவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்திரக்கதை வடிவில் வெளியிடத்தொடங்கி இருக்கின்றனர்.
இதன் முதல் புத்தகம் திருஞானசம்பந்தர் பற்றியதாகும். 2003ல் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தின்  அட்டைபடங்களும் இன்ன பிற பக்கங்களின் ஸ்கேன்களும் உங்கள் பார்வைக்கு...







இதில் இரண்டாவது புத்தகமான "திருநாவுகரசர் திவ்ய சரித்திரம்" இதழை இந்த புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.


சமயகுரவர்களின் வரிசையில் இது இரண்டாவது புத்தகம். முதல் நூல் திருஞானசம்பந்தர் பற்றியது. இந்த "திருநாவுகரசர் திவ்ய சரித்திரம்" நூல் திருவிடைமருதூர் என். இராசேந்திரன் என்பவரின் தனிபட்ட கைவண்ணத்தில் முழு இதழும் உருவாகி உள்ளது.

 டின் டின் புத்தகங்களின் size ல் ஒரு தமிழ் காமிக்ஸை பார்ப்பதே குதூகலம் தான் . புத்தகத்தை 125 ரூபாய் என்ற விலையில் வாங்கும் போது சற்று நெருடலாக தான் இருந்தது. ஆனால் இதழை படிக்கும் போது அந்த நெருடல் குறைந்து விடுகிறது.




எனக்கு புராண கதைகளின் மேல் அந்தளவு ஈர்ப்பு இல்லையென்றாலும் சித்திரக்கதை என்பதால் சீக்கரம் படித்து விட்டேன். கதை சுருக்கம் இதுதான்
 
திருநாவுகரசரின் பெற்றோர்கள் மற்றும் அவரது தமக்கையாருக்கு நிச்சியக்கப்பட்ட மாப்பிள்ளை ஆகியோர் போர் ஒன்றில் மரணமடைந்து விடுகிறார்கள். (சோழர்காலத்து கதை) தனித்து விடப்பட்ட குழந்தைகளில் அக்கா (திலகவதி) சைவ மதத்திலும் தம்பி (திருநாவுகரசர்) சமண மதத்திலும் பற்று கொண்டு வாழ்கின்றனர். தம்பியை சைவ மதத்திற்கு மாற்ற முயலும் திலகவதி அம்மையார் சிவனுடைய உதவியோடு வெற்றி பெறுகிறார். தற்போது முழுமையான சிவபக்தராக இருக்கும் திருநாவுகரசர் மீது சோழ அரசனின் பகைமை பார்வை படுகிறது. இதற்கு அப்புறம் தசாவதாரம் திரைபடத்தில் வரும் காட்சிகள் இந்த கதையிலும் வருகின்றன. (திரைபடத்தில் அரசர் - சைவ மதம், அம்பி - சமண மதம், இந்த கதையில் அப்படியே உல்டா. ஒரே மதத்தினுள் இத்தனை பகைமையா? )



கதையில் வரும் தசாவதார காட்சிகள்...

சிவனுடைய அருளால் சோழ அரசனின் அனைத்து இக்கட்டுகள்லிருந்து மீள்கிறார் திருநாவுகரசர். அதன் பிற்கு நெடிய பயனங்கள் மேற்கொண்டு சைவ மதத்தின் அருமைகளை இனிய தமிழ் பாடல்களாக வழங்குகிறார். கதையின் இறுதியில் ரம்பை ஊர்வசி போன்றோரின் கிலுகிலுப்பான சில காட்சிகளும் இடம் பெறுகிறது. அவர்களின் திருநாவுகரசரை காமத்தில் வீழ்த்தும் முயற்சி படுதோல்வியில் முடிவதோடு கதையும் முடிகிறது.


தேவலோக கன்னிகளின் முயற்சிகள்

 
இன்னும் சில சிறந்த ஓவியங்கள்
 
இந்த இதழில் குறிபிடத்தகுந்த விஷயம் திருவிடைமருதூர் என். இராசேந்திரன் அவர்களின் சித்திரங்கள் தான். சித்திரங்கள் அட்டகாசம். அவ்வப்போது தலை காட்டும் பெயிண்டிங் ரக ஓவியங்கள் இன்னும் அருமை. சில இடங்களில் ஓவியர் செல்லம் அவர்களின் சாயல் தெரிகிறது. அமுத நிலயம் வெளியிட்டிருக்கும் மற்றோரு சித்திரக்கதையான திருஞானசம்பந்தர் புத்தக கண்காட்சியில் கிடைக்கவில்லை. நேரடியாக பதிப்பகத்தில் கிடைக்க கூடும்.


நண்பர்கள் பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Saturday, January 2, 2010

Prodigy comix - அப்துல் கலாம்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..

இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு காமிக்ஸ் புத்தகமாவது வாங்கி விட வேண்டும் என சென்ற நான் "அப்துல் கலாம்" என்ற அற்புதமான காமிக்ஸ் ஒன்றை கையகபடுத்தினேன். கிழக்கு பதிப்பகத்தின் P-32 ஸ்டாலில் 'Prodigy comix' என்ற புத்தக வரிசையில் அப்துல் கலாம் அவர்கள் பற்றிய இந்த காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறது.



S. சுஜாதா என்பவரின் எழுத்திலும் K. சொக்கலிங்கம் என்பவரின் ஓவியத்திலும் சிறப்பான காமிக்ஸ் புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்ப வசதிகளை நன்றாக பயன்படுத்தி இருப்பார்கள் போலும். கதை, ஓவியத்திற்கு அடுத்தபடியாக வண்ணம்(colors) என்ற இடத்தில் தனிமனிதரின் பெயர் ஏதும் இல்லாமல் அனிமேஷன் நிறுவனம் ஒன்றின் பெயர் உள்ளது. நல்ல முன்னேற்றம் தான்.

கிழக்கு பதிப்பகம் website மூலமாக ஏற்கனவே இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டிருந்ததால் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் விசாரித்த போது காமிக்ஸ் புத்தகமெல்லாம் இங்கு விற்பதில்லை என்று கூறி விட்டார்கள். அப்புறம் சிறிது நேர தேடுதல்க்குப்பின் புத்தகம் கண்ணில் பட்டது. இதே வடிவில் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.


கதை, மொழிநடை, ஓவியம், வண்ணம் மற்றும் அச்சு என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்க்கை வரலாறு என்றாலும் சிறிது கூட அலுப்பில்லாமல் பக்கங்களை திருப்பமுடிகிறது. ஏற்கனவே அக்னிச் சிறகுகள் படித்திருந்தாலும் பல விஷயங்கள் புதிதாக (அல்லது புதிய கோணத்தில்) தெரிந்துகொள்ள முடிகிறது. அப்துல் கலாமின் வழ்க்கையில் அவர் சந்தித்த தோல்விகள் பற்றிய தகவல்கள், 'தோல்வியே வெற்றியின் முதல் படி' என்ற வரிகளுக்கு அப்துல் கலாம் சிறந்த உதாரணம் என காட்டுகிறது. அவரின் முதல் ஏவுகலம் (S.L.V) விண்ணில் செலுத்தப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வெடித்து சிதறுகிற காட்சி இந்த புத்தகத்தில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.


 அப்துல் கலாமின் M.I.T  நாட்கள்

நந்தி எனும் தோல்வி முயற்சி


காமிக்ஸ் வடிவில் ஒரு அற்புத தலைவரின் வாழ்க்கை வரலாற்றை கொடுத்து தமிழ் காமிக்ஸ் உலகை பெருமையடைய செய்திருக்கும் கிழக்கு பதிப்பதிற்கு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் நன்றிகள். இந்த முயற்ச்சியின் அடுத்த கட்டதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். தமிழில் பெரியவர்களும் படித்திடும் தரமான காமிக்ஸ்கள் கிழக்கு பதிப்பகம் மூலமா வந்திட வேண்டும்.
இதே ஸ்டாலில் மேலும் சில தமிழ் காமிக்ஸ்கள் கிடைக்கிறது. ஆனால் அவை மிகவும் சிறிய குழந்தைகளுக்கானவை என்பதால் நான் வாங்கவில்லை. குழந்தைகளுக்கு புத்தகம் வாங்க விரும்புவோர்க்கு பயன்படும்.

Prodigy comix - அப்துல் கலாம் இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்

--------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க கூடிய இதர காமிக்ஸ் புத்தகங்கள் (என்க்கு தெரிந்த வரை)

மணிமேகலை பதிப்பகம்
அப்புசாமியின் கலர் டிவி
தாராவும் குகை மனிதர்களும்

நியு சென்சுவரி புக்
ரஷ்ய புரட்சி

கிழக்கு பதிப்பகம்
'Prodigy comix' - அப்துல் கலாம்
மேலும் சிறிய குழந்தைகளுக்கான சில காமிக்ஸ் வடிவ கதைகள்

விகடன் பதிப்பகம்
நடுகடல் நாசகாரன்
மரணம் துரத்தும் மஞ்சு
வேற்றுக்கிரக விரோதிகள்

(இவை சுட்டி விகடனில் இனைப்பாக வெளிவந்த சுட்டி காமிக்ஸின் பதிப்பக வடிவம்)

சென்ற ஆண்டு போலவே Info Mapல் லயன் காமிக்ஸ் கிடைக்கிறது

பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே....