இதே ஓவியங்களின் மறுபதிப்பை ஒரு பழைய மாத இதழில் (ஓம் சக்தி) பார்க்க நேரிட்டது. அவற்றின் ஸ்கேன்கள் அப்படியே இங்கே....
Showing posts with label மணியம். Show all posts
Showing posts with label மணியம். Show all posts
Monday, August 9, 2010
வாதாபி கலை மடல்
ஓவியர் மணியம் அவர்கள் ஒரு முறை கன்னட நாட்டிலுள்ள பாதாமி என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்த சிற்பங்களை ரசித்து வியந்து ஊள்ளார். மன்னர்கள் காலத்தில் இச்சிற்பங்கள் எப்படி வடிக்கப்பட்டு இருந்திருக்கும் என்ற கற்பனையை ஓவியமாக தீட்டி அன்றைய கல்கி இதழில் வெளியிட்டுள்ளார். இவ்வோவியங்களுக்கு அவர் வைத்திட்ட பெயர் 'வாதாபி மடல்'
இதே ஓவியங்களின் மறுபதிப்பை ஒரு பழைய மாத இதழில் (ஓம் சக்தி) பார்க்க நேரிட்டது. அவற்றின் ஸ்கேன்கள் அப்படியே இங்கே....
இதே ஓவியங்களின் மறுபதிப்பை ஒரு பழைய மாத இதழில் (ஓம் சக்தி) பார்க்க நேரிட்டது. அவற்றின் ஸ்கேன்கள் அப்படியே இங்கே....
Sunday, January 31, 2010
பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - சுழற் காற்று (Ponniyin selvan pictures II)
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சித்திரங்களிலான முந்தைய பதிவை அடுத்து இரண்டாம் பாகமான சுழற் காற்றின் சித்திரங்கள் இந்த பதிவு மூலம் வழங்கப்படுகிறது. முன்பு ஓவியர் வினுவின் கைவண்ணத்தை பார்த்தோம். இப்போது ஓவியர் மணியம் அவர்களின் கைவண்ணத்திலான் ஓவியங்களை பார்ப்போம். பொன்னியின் செல்வன் 1987 ல் கல்கியில் தொடர்கதையாக வந்த போது வெளிவந்த சித்திரங்கள் இவை. பைன்டிங் செய்யப்பட்ட புத்தகம் என்பதால் சில ஸ்கேன்களின் நடுவே வரும் கருப்பு கோடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இரண்டாம் பாகத்தின் பல சித்திரங்களில் ஒரு சில சித்திரங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.
பதிவின் கடைசியில் இருக்கும் வரைபடம் பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது கதையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
பூங்குழலியின் அழகிய தோற்றம்
வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் கோடியக்கரையில் நுழையும் காட்சி
வந்தியத்தேவனும் பூங்குழலியும்
நீச்சல் தெரியாத வந்தியத்தேவனை வேடிக்கை செய்யும் பூங்குழலி
பூங்குழலியின் வீட்டில்
இராமேசுவரத்திலிருந்து அநிருத்த பிரம்மாதிராயர் தனது குழுவுடன் இலங்கை செல்லும் காட்சி
காவரித்தாய் மீட்டெடுத்த பொன்னியின் செல்வன்.
சுந்தர சோழரின் ஊமைராணி பற்றிய நினைவுகள்
இலங்கையில் மத யானை ஓடிவரும் காட்சி
யானையை துரத்த முயலும் ஆழ்வார்க்கடியான்
சீனத்து யாத்திரீகர்களின் யானை பவனி. (யானை பாகனாக பொன்னியின் செல்வன்)
இலங்கை வீதிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான்
புத்த பிஷூ சங்கத்தில் இளவரசர்
பூங்குழலியும் இளவரசரும்
யானை பாகனாக இளவரசரும் பூங்குழலியும்
அரேபியர்களுடான சண்டையில் வந்தியத்தேவன்
அரேபியர்களின் கப்பலை தாக்கும் இடி
அந்த கப்பலில் மரணத்தை சந்திக்க தயாராகும் வந்தியத்தேவன்
வந்தியத்தேவனை காப்பற்றும் முயற்ச்சியில் பொன்னியின் செல்வர்
பூங்குழலியின் படகு மூலம் கரைக்கு செல்லும் காட்சி
கதை நடக்கும் இடங்களில் வரைபடம்
பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - முதல் பாகம்
கல்கியின் மோகினி தீவு சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
கல்கியின் புதல்வி ஆனந்தி அவர்களின் சித்திரக்கதை பற்றிய பதிவை படிக்க....
குறிப்பு: பொன்னியன் செல்வன் மீதுள்ள பற்றால் ஓவியங்கள் பதிவு இடபட்டுள்ளது. உரிமையாளர் விரும்பினால் நீக்கப்படும்.
Labels:
கல்கி,
சோழர்,
பொன்னியின் செல்வன்,
மணியம்,
வினு
Subscribe to:
Posts (Atom)

























