Wednesday, September 30, 2009

தினதந்தி புத்தக மதிப்புரையில் "இராஜ கம்பீரன்"

(பதிவிற்க்கு செல்லும் முன்  திருமண வாழ்க்கையில் "அடி" எடுத்து வைக்கும் ரஃபிக் நண்பர்க்கு வாழ்த்துக்கள்........ ஹனிமூன் கிளம்பியாச்சா சார்?? )

இன்றைய (30/09/09)  தினதந்தி பத்திரிக்கையில் "புத்தக மதிப்புரை" பகுதியில் வெளிவந்துள்ள "இராஜ கம்பீரன்" என்ற சித்திரகதை புத்தகம் பற்றிய மதிப்புரை உங்கள் பார்வைக்கு.....



எழுத்து & சித்திரம் - தங்கம்
பதிப்பகம் - தங்கப்பதுமை, தஞ்சாவூர்.

(ராஜராஜன் கால கதை என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்)

இப்புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும்? ? இனிமேல் தான் தேட வேண்டும். கிடைக்குமிடம் தெரிந்தால் நன்பர்கள் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்....

Thursday, September 24, 2009

கதை மலர் - தொடர்ச்சி (Kathai malar - 2)

இது கதை மலர் - ஒரு அறிமுகம் பதிவின் தொடர்ச்சி.......

கதை மலரின் ஓவியர்கள்

ஏற்கனவே குறிப்பிட்ட படி கதை மலரின் 80% சித்திரங்களை ஓவியர் சங்கர் வரைந்துள்ளார். அது மட்டுமல்லாது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்க்கு நன்கு பரிச்சியமான ஓவியர்கள் பலரை இங்கு பார்க்கலாம். (உ-ம்) செல்லம், வினு, மணியம் செல்வன், ரமணி, சித்ரலெகா, பத்மவாசன், கோபன், தாமரை, ஜயந்தி ஆகியோரின் ஓவியங்களை கதை மலரில் நாம் ரசிக்காலாம்.

10க்கு மேற்பட்டோர் கதை எழுதி உள்ளனர். அதில் வாண்டு மாமா, எ. சோதி (முட்டாள் கதைகள் புகழ்) போன்றவர்களும் அடங்கும். வாண்டு மாமா பீர்பால் கதைக்கு கதையமைப்பு செய்துள்ளார். ஓவியர்கள் அனைவரது கைவண்ணத்தையும் இங்கு நீங்கள் காணலாம்.

ஓவியர் செல்லம்


 
சித்ரலெகா 


ஜயந்தி



கோபன்


 

தாமரை

 

ஓவியர் ரமணி


ஓவியர் வினு



பத்மவாசன்




ஓவியர் மணியம் செல்வன்


வாண்டு மாமாவின் பீர்பால் கதை



கதை மலர் Vs அமர் சித்திர கதா

கதை மலரில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வட இந்தியாவில் இருந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளிவரும் "அமர் சித்திர கதா" இதழிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டு இதழ்களும் புராண கதைகளை வெளியிடும் பத்திரிக்கைகள் என்பது ஒற்றுமை.

கதை மலரில் கிட்டதட்ட அனைத்து கதைகளும் 4 பக்க கதைகள். (எப்பிடிப்பட்ட புராண சம்பவத்தையும் 4 பக்கங்களில் அடக்கி விடுகிறார்கள்). ACK ல் 32 பக்க கதையாக தருகிறார்கள். கதை மலரில் சாந்தமான தெய்வீகமான் காட்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் AKC ல் அதிரடியான ஆக் ஷன் சம்பவங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஓவியங்களில் கதை மலரை ACK யால் மிஞ்ச முடியாது. இந்த ஒப்பீட்டை கதை பகுதிகளில் இருந்து நீங்கள் கண்டு கொள்ளலாம்.

அய்யபன் வரலாறு கூறும் கதையை  இந்த இரண்டு இதழ்களிலும் பார்க்க நேரிட்டது. அதில் வரும் ஒரு கட்சியை இரண்டு இதழ்களிலும் பாருங்களேன்...

அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (ACK)


 
அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (கதை மலர்)



கதை மலர் ஆங்கில பதிப்பு

கதை மலர் ஆங்கில பதிப்பு - அழகான ஆங்கிலத்தில் மொழிபெயற்ப்பு செய்யப்பட்டு "Pictorial stories for children" எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.
கதை மலர் ஆங்கில பதிப்பு 1990 களின் ஆரம்பத்தி தொடக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. காமிக்ஸில் தமிழ் to ஆங்கிலம் மொழிமாற்றம் வேறு எங்கேனும் செய்யப்பட்டு இருக்கிறதா?? என்க்கு தெரியவில்லை

ஆங்கில இதழின் சில பக்கங்கள் இங்கே...







படித்துவிட்டு கருத்துகளை கூறிடுங்கள் நன்பர்களே....

Wednesday, September 9, 2009

கனவா நிஜமா - Parvathi chitra kathai

தமிழில் பல காமிக்ஸ்கள் வந்து இருந்தாலும் வெற்றி பெற்றவை சிலவே. அதிலும் மொழி மாற்றம் இல்லாமல் நேரடியாக வெளிவந்த காமிக்ஸ் இதழ்களில் வெற்றி பெற்றவைகளில் முதன்மையான இதழ் " வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள்" ஆகும். விற்பனையில் சாதனை புரிந்த இந்த இதழ் நின்று போனது தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு பெரும் சோகமே. இத்தகைய சிறப்புக்கள் மிகுந்த இதழின் 15 வது படைப்பு " கனவா நிஜமா". வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள் பற்றிய முழு விபரங்களை விவாதிக்க ஒரு பதிவு போதாது. இந்த பதிவில் எனக்கு பிடித்த கதை ஒன்றை பற்றி எழுதுகிறேன்.

ஒரு ஆடு மேய்க்கும் இடையனால் எப்படி ஒரு தேசத்தை காப்பாற்ற முடிகிறது என்பதே கதை.





இமயத்தின் அடிவாரத்தில் மாயாபுரி என்று ஒரு தேசம் மன்னர் வஜ்ரபாகு வின் நல் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆடு மேய்க்கும் இடையன் நீலன் தான் இக்கதையின் நாயகன். அவன் ஒரு முறை ஆடு மேய்க்கும் போது ஒரு விதமான வாயுவினை சுவாசிக்க நேரிடுகிறது. அது அவனை கனவா நிஜமா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் பத்து வருடங்களுக்கு பின் இட்டு செல்கிறது. பத்து வருடங்களுக்கு பின் அவன் நாட்டில் நடந்திடும் மாற்றங்களை அவனால் பார்க்க முடிகிறது. மாற்றங்கள் மகிழ்ச்சி தருபவையாக இல்லை. தற்போது சேனாதிபதியாக இருக்கும் தந்தவக்கரின் அடிமைசாசனத்தில் நாடு அவதி பட்டுக்கொண்டு இருந்து.









சிறிது நேரத்திலேயே நிகழ்காலத்திற்கு வந்து சேரும் நீலனால் அமைதியாக இருக்க முடியவில்லை. சாதாரண ஆடு இடையனாக நாட்டை காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் உதாசீனப்படுத்தபடுகிறது.
ஆனால் அவன் நாட்டை காப்பற்றும் முயற்சியில் பின் வாங்கவில்லை. தன் அடையாளங்களை மாற்றுகிறான். மாற்று வழியினை தேர்ந்து எடுத்து வெற்றியும் பெறுகிறான்.




இந்த கதை எந்த வடிவத்தில் (நாவல், திரைப்படம், காமிக்ஸ் etc) வந்து இருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும் என்பது என் கருத்து.

வாண்டு மாமாவின் அருமையான கதை, மொழி நடை மற்றும் செல்லத்தின் அட்டகாசமான சித்திரங்கள் என தரமான இதழ். இங்கே நாம் காணும் சித்திரங்கள் எந்த ஒரு அயல் நாட்டு சித்திர கதைக்கும குறைந்தது இல்லை.
கதை இந்தியாவில் நடந்தாலும் ஒரு சில காட்சிகளில் ஓவியங்களில் மிக சிறிதாக பாரசீக மற்றும் ரோமானிய சாயல் தெரிகிறது. ஆனால் இதுவே மாயாபுரி வீரர்களுக்கும் தார்தாரியர் வீரர்களுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது.




பெருன்பான்மையான பார்வதி சித்திர கதைகள் பழைய கல்கி, ஆனந்த விகடன், கோகுலம் ஆகிய இதழ்களில் தொடர் கதையாக வந்தவைதான் எனபது அனைவரும் அறிந்ததே. கனவா நிஜமா எந்த பத்திரிகையில் வந்தது எனபது தெரியவில்லை. அதேபோல் இந்த இதழின் அட்டை படமும் யார் வரைந்தது என தெரியவில்லை.
பதிவை படித்து கருத்துக்களை பகிர்ந்திட மறவாதீர் நண்பர்களே..