Sunday, May 1, 2011

வாண்டுமாமாவின் ஹீரோ சங்கர்

வணக்கம் தோழர்களே, அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள், பதிவிடுதலில் விழுந்துவிட்ட பெரிய இடைவெளியை குறைப்பற்காக ஒரு சிறிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். மேகலா பத்திரிக்கை குழுவினர் தனியாக மேகலா காமிக்ஸ் என்ற காமிக்ஸ் பத்திரிக்கை நடத்தி  வந்தது நம் அனைவரும் அறிந்தது. அதே போல் அவர்களின் மாத நாவலிலும் எட்டு பக்கங்களை படக்கதைக்கு ஒதுக்கும் வழகத்தினை கொஞ்ச காலம் கொண்டிருந்தனர். பெறும்பாலும் இந்த பக்கங்களை அலங்கரிப்பது நம் வாண்டுமாமாவின் சித்திரக்கதைகளே. குஷிவாலி ஹரிஸ், சமத்து சாரு போன்ற கதாபாத்திரங்களை பார்த்த ஞாபகம் உள்ளது. இதோ இங்கு நீங்கள் பார்க்கும் கதை "ஹீரோ சங்கர்" எனும் சிறுவனுடைய சாகஸம். பார்வதி சித்திரக்கதைகளில் நாம் பார்த்திராத வாண்டுமாமா கதைகளில் இதுவும் ஒன்று. கயவர்களால் கடத்தப்பட்ட ஒரு சிறுமியை ஹீரோ சங்கர் வையாபுரி என்னும் துப்பறியும் அன்பரின் துணையுடன் மீட்பதே கதை. சித்திரங்களை சசி வரைந்துள்ளார். இந்த சித்திரக்கதை 'மே 1996' தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ளது. இந்த கதையின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...





 இந்த கதை வெளிவந்த மேகலா இதழ்