Showing posts with label தமிழ் காமிக்ஸ். Show all posts
Showing posts with label தமிழ் காமிக்ஸ். Show all posts

Tuesday, October 4, 2011

சூர்யா காமிக்ஸ்

சிறுவர்களுக்கான பல நூலகளை எழுதியவர் பஞ்சுமாமா (தேவக்கோட்டை பஞ்சுநாதன்). சிறுவர்களுக்கான நீதிக்கதைகள், தெனாலிராமன் கதைகள் மாதிரியான நூல்களை இவர் வழங்கியிருக்கிறார். புத்தகப்பூங்கா பதிப்பகம் மூலம் இவரின் புத்தகங்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். 1990களில் இவர் வெளியிட்ட சித்திரக்கதை இதழ் தான் சூர்யா காமிக்ஸ். இந்த காமிக்ஸின் 3வது (என்று நினைக்கிறேன்) இதழான 'பனிமலையில் தம்பித்துரை'  பற்றி கொஞ்சமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

அட்டைப்படம்

ஆசிரியர் பகுதி

கதையின் சில பக்கங்கள்



வாசகர் கடிதம்

புத்தகப் பூங்கா விளம்பரம்

வழக்கம் போல கதை எழுதியவர் பெயர் மற்றும் சித்திரங்களின் சொந்தக்காரர் பற்றிய தகவல் ஏதும் இல்லை.

கதை - இமயமலை ஏறும் குழுவினர் காணாமல் போக, நாட்டில் உள்ள அனைவரும் மண்டையை பிச்சு கொண்டிருக்க, நம் கதையின் நாயகன் தம்பித்துரை தமிழ்நாட்டில் இருந்து இமயமலை கிளம்புகிறான். மலை ஏறும் குழுவினர் ஏன் காணாமல் போயினர் எங்கு இருக்கின்றனர் போன்ற அனைத்து விபரங்களையும் தம்பித்துரை கண்டு பிடிக்கிறான்.

தெளிவான கதையோட்டம், அதற்கேற்ற வசனங்கள், ஓரளவு தரமான சித்திரங்கள் என இந்த இதழ் சராசரியான தமிழ் சித்திரக்கதைகளின் தரத்தை விட சற்று சிறப்பாகவே உள்ளது.  முந்தைய இதழான சிங்கபுரி ரகசியம் இதழ் இல்லை என்றாலும் படித்த ஞாபகம் லேசாக உள்ளது. அதுவும் தம்பித்துரை சாகஸம் தான். சுவாரிஸ்யமான கதை என்றே என் ஞாபகம் உள்ளது

மொத்தம் எத்தனை இதழ்கள் வந்தது என்பது பற்றி தெளிவான கருத்து இல்லை. 4 - 5 இதழ்கள் வந்திருக்க கூடும் என்பது என் எண்ணம்.  நண்பர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நண்பர் கௌதம் அவர்கள் சூர்யா காமிக்ஸ் பற்றி தெரிவிக்கும் தகவகள் அவரின் வரிகளிலேயே..
""சூர்யா காமிக்ஸின் முதல் வெளியீடு ஓநாய் மனிதர்கள். மூன்று கதைகளும் தினமணி கதிரில் சித்திரத் தொடராக வந்தன. கதை எழுதியவர் கேயார். சித்திரம் -பாலாஜி""

Thursday, September 23, 2010

மங்க்கி காமிக்ஸ் (Monkey comics)

வணக்கம் நண்பர்களே... ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு. சமீப காலமாகவே காமிக்ஸ் பதிவுலகில் பதிவுகள் குறைந்துவிட்டது  போல் தெரிகிறது. கனவுகளின் காதலர் மட்டும் பின்னிஎடுக்கிறார். (ஆனால் காமிக்ஸ் பற்றிய பதிவுகள்தான் குறைவு). அதே போல் லயன் காமிக்ஸ் அலுவலகத்திலிருந்து  எந்த நற்செய்தியும் வராமலிருப்பது சோர்வளிக்கிறது. கூடிய விரைவில் நற்செய்தி எதாவது வந்தால் நன்றாக  இருக்கும்.

இனி பதிவிற்கு செல்வோம்...
மங்க்கி  காமிக்ஸ் (இப்படியும்  ஒரு பெயர்) - 1995~1999 களில் வெளிவந்த தமிழ் சித்திரக்கதை இதழ்.  மொத்தம் 8 ~ 10 இதழ்கள் வந்திருக்கும் என் எண்ணுகிறேன். என்னிடம் நான்கு இதழ்கள் உள்ளன.

நட்சத்திர யுத்தம்

முதல் இதழான நட்சத்திர யுத்தம் 1995 ல் வெளிவந்து இருக்கிறது. ஆசிரியரின் குறிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.






கழுகு மலை புதையல்
இது ஒரு இ.கோ.மு.சிங்கம் போல் இந்திய கெளபாய் கதையாகும். ராஜ்பிரசாத் என்பவர் கதை மற்றும் ஓவியங்கள் வரைந்துள்ளார். ஓவியர் மாருதியின் அட்டகாச அட்டைபடம் இதழுக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ன்ட். காமிக்ஸ் உலகில் மாருதியின் படைப்புகள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. அட்டைப்படத்தில் இருக்கும் தரத்தை உள்ளேயும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மற்றபடி புத்தகத்தின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு.
(அட்டைபடம், ஆசிரியர் பக்கம், வாசகர் கடிதம், வள்ளியண்ணா சிறுகதை மற்றும் தொடர்கதை....)

 



மங்க்கி  காமிக்ஸ் ஸ்பெஷல் :
கோடை காலத்தில் மங்க்கி காமிக்ஸில் இருந்து வெளிவந்த ஒரு ஸ்பெசல் புத்தகத்தின் சில பக்கங்கள்....இங்கு மாருதியின் அட்டைபடம் மிஸ்ஸிங்.
ஜட்ஜ் dredd - அட்டைபடத்தில் மட்டும்.

(போலிஸ் அக்காவின் தாடிக்காக மாஸ்டர் சிவ் வை மன்னித்துவிடுங்கள்.)
இந்த இதழின் கதைகளின் முதல் பக்கங்கள் ....



இந்த ஸ்பெஷல் இதல் ஏற்கனவே வந்திருந்த கதைகளின் மறு பதிப்பே.

பதிவை பொறுமையாக படித்தற்கு நன்றி.  தங்கள் கருத்துகளையும் தகவல்களையும்  நண்பர்கள் இங்கே  பகிர்ந்து கொள்ளவும்.

Thursday, April 15, 2010

பூவிழி காமிக்ஸ் (Poovili comics & bright moon comics)

தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல்~ஜூன் மாதங்களில் காமிக்ஸ் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் மட்டுமே வெளிவக்கூடிய காமிக்ஸ் பத்திரிக்கைகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் பூவிழி பப்ளிக்கேஷன்ஸ். மதுரையில் இருக்கும் இவர்களுடைய நிறுவனத்திலிருந்து 'பூவிழி காமிக்ஸ்' மற்றும் 'பிரைட் மூன் காமிக்ஸ்' என இரண்டு காமிக்ஸ்கள் வெளிவந்தன. இவை வெளிவந்த ஆண்டு 1996 லிருந்து 1999 வரை. மொத்தம் வெளிவந்த காமிக்ஸ்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. கண்ணால் பார்த்த காமிக்ஸ்களை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் பூவிழி காமிக்ஸில் 10 புத்தகங்களும் பிரைட் மூன் காமிக்ஸில் 3 புத்த்கங்களும் வந்திருக்க வேண்டும். M. உதயகுமார் என்பவரை ஆசிரியராக கொண்டு இந்த இதழ்கள் வெளிவந்திருக்கிறது. எம். ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதைகளை படைத்திருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் அவர்களின் படைப்புகளை மலர் காமிக்ஸ் மற்றும் தேசமலர் காமிக்ஸில் நீங்கள் படித்திருக்ககூடும். (இவரின் படைப்புகள் பற்றிய ஒரு பதிவை விரைவில் இடலாம் என இருக்கிறேன்). இறுதி இதழ்கள் அனைத்தும் எதாவது ஒரு ஆங்கில படத்தை மூலமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம் - பூவிழி பப்ளிக்கேஷன்ஸ், மதுரை
ஆசிரியர் - M. உதயகுமார்
பக்கங்கள் - 48
விலை - ரூ 4
ஆண்டு - 1996 லிருந்து 1999 வரை (தோராயமாக)
எண்ணிக்கை - 13 (தோராயமாக)
 
இனி சில காமிக்ஸ்களின் அட்டைபடங்கள் மற்றும் சில பக்கங்கள்
 
1. வேட்டையாடும் பிசாசு - ஸ்ரீகாந்த்

2. மோகினித்தீவு - ஐஸ்வர்யா

3. விண்வெளி அரக்கன் - ஐஸ்வர்யா
(இங்கு அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது. பூவிழி காமிக்ஸின் லோகோவும் மாறி உள்ளது) 

4. பூத சுரங்கம் - ஐஸ்வர்யா
(இங்கும் அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது)


5. டினோசர் பயங்கரம் - ஸ்ரீகாந்த்
(ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை தழுவிய கதை)

6. எரிந்த மனிதன் - ஐஸ்வர்யா
 இந்த இதழில் ஸ்ரீகாந்த் உருவாக்கிய 'சிங்கரதம்' என்ற 32 பக்க வரலாற்று கதையும் இடம் பெற்று இருக்கிறது

7. பறவை மனிதன் - ஐஸ்வர்யா
(இந்த கதை கிட்டதட்ட பேட்மேன் கதை போலவே உள்ளது) 

இரத்தப்பேய் - ஐஸ்வர்யா
(இந்த இதழில் நமது காக்கை காளியை தழுவிய ஒரு சித்திர சிறு கதையும் இடம் பெற்றுள்ளது. 

இனி பிரைட் மூன் காமிக்ஸ் பற்றி பாப்போம். காமிக்ஸ் பெயரை தவிர பூவிழி காமிக்ஸ்க்கும் பிரைட் மூன் காமிக்ஸ்க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இதில் தான் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கிங்காங் சித்திரக்கதை வெளியிடப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் குறைவாகவே வெளிவந்துள்ளதாக தெரிகிறது.

1. பேய் சொல்லைத் தட்டாதே - ஐஸ்வர்யா

2. கல்லறைக் காவலன் - ஐஸ்வர்யா

கிங் காங் - ஐஸ்வர்யா
இந்த இதழின் அட்டைபடத்தை பார்த்த சில்ர் இந்த கதை அடுக்குமொழி புகழ் தமிழ் நடிகர் பற்றிய கதையா என விசாரித்தனர். அப்படியெல்லாம் இல்லை நண்பர்களே. இந்த கதை அப்படியே ஆங்கில படத்தின் காமிக்ஸ் வடிவமே ஆகும். இங்கும் ஒரு காட்டு குரங்கு சூப்பர் பிகர் ஓன்றை கரைட் செய்து அலம்பல் செய்கிறது. கதையின் கிளைமாக்ஸ் தான் நாம் யாருமே எதிர்பார்க்காத முடிவு. இந்த இதழ் வெளிவந்த ஆண்டு 1998. இந்த இதழில் ஸ்ரீகாந்த் எழுதிய தூங்காத துப்பாக்கி எனும் 32 பக்க கதையும் இடம் பெற்றுள்ளது.


மேற்கண்ட இதழ்களின் தரம் பற்றி நீங்களே ஓரிரு பக்கங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். ஆனாலும் தமிழில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நாம் நன்றி கூறியே ஆக வேண்டும்.
வண்ணமையமான அட்டைப்படங்களும் சிறபாக உள்ளன. பள்ளி படிக்கும் போது இந்த இதழ்களை வாங்க தூண்டியதே வண்ணமையமான அட்டைபடங்களே.
இதழ்களின் விற்பனை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டதாக தெரியவில்லை.


இந்த இதழ்களை பற்றி நண்பர்கள் ஏதேனும் தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

(பி-கு) சி.ஐ.டி சிங்காரம் பதிவு கூடுதல் தகவல்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தாமதமானாலும் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே